இந்த புத்தகம் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ஒர் அற்புதமான காதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பற்றின தொகுப்பாகும். அக்காதாபாத்திரம் தலை மற்றும் சரீரமாகிய கிறிஸ்துவின் நிழலான யோசேப்பு ஆகும். நமக்கு அடையாளமாக இருக்கக்கூடிய யோசேப்புடைய வாழ்க்கையின் சம்பவங்களையும் அதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகளையும் புரிந்து பயனடையும் வகையில் சகோதரர் ரசல் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து இப்புத்தகம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
யூதர்கள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்பட்டு, வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு வந்த காலம் அது. அதே சமயம் 7 – ஆம் சபையும் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.
அவருடைய மகா மேன்மையும், அருமையுமானவாக்குத்தத்தங்கள் அவருடைய இரக்கத்தின் தூதுவர்களாக இருந்து—-நமக்கு ஊழியம் புரிந்து, நம்மை பலம் உடையவர்களாக்குகின்றது. நாம் எவ்வளவாய் வாக்குத்தத்தங்களை நம் மனதுக்கு முன்பாய் வைக்கின்றோமோ, அவ்வளவாய் இந்த நெருக்கமான வழியில் ஓட பலமும், துணிவும் பெற்றிருப்போம். உண்மையான தேவபக்திக்குள் நடத்துவதில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைப் பார்க்கிலும், பெரிதான தூண்டுதல் வேறொன்றும் இருக்க முடியாது.
வேத மாணவர்களின் வெளியீடு The Herald – Of Christ’s Kingdom தேவ வார்த்தையிலிருந்து சிந்தனைமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இரு மாதம் ஒருமுறை வரும் கிறிஸ்தவ இதழ்/பத்திரிகை. Home / Herald / 2011 Download Download Download Download Download Download Share via: 0 Shares Facebook 0 Email Copy Link More
அன்பானவர்களே! நாம் அறிவுபெருத்த காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். அறிவினைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் அழிவிற்கே வழிவகுக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் பாலியல் சம்பந்தமான அறிவும். நாம் பெலவீன மாம்சத்திலிருக்கின்றோம். எளிதில் இரகசியமாக, பாவத்தில் விழும் கண்ணியாக இப்பாலியல் சார்ந்த காரியங்கள் இருக்கின்றன. இக்காரியத்தில் பலர் இழுப்புண்டு புதுச்சிருஷ்டி ஜீவியத்தில் தொய்ந்துப்போய் எவ்வாறு மேற்கொள்வது என்று தெரியாமல் நிற்கின்றனர். இதில் வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் எனப் எப்பாகுபாடுமின்றி அனைவருமே அதன் தாக்கத்திற்குள்ளாகுகின்றனர்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸைக்கொண்டு, இஸ்ரயேல் தேசத்தில் நிகழக்கூடிய தானிய மற்றும் திராட்சை பழ விளைச்சல் மற்றும் அறுவடையைப் பற்றியும், அதற்கு ஒப்பாகக் கடைசிநாட்களில் நடக்கவிருக்கும் ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய விளைச்சல் மற்றும் ஆறுவடையைப் பற்றியும் ஒரு உவமையின் மூலமும் நிழல்-பொருள் முறையிலும் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கும், காலத்திற்கு ஏற்ற ஒரு மன்னா இப்பாடமாகும்.