சக்தி வாய்ந்த பிரசங்கம்

மே 2025

ஓர் ஊழியக்காரன் பற்றின பதிவு பின்வருமாறு:
அந்த ஊழியக்காரன் இளம் சீடர் ஒருவரிடம், “இன்று நாம் வெளியே போய், பிரசங்கம் செய்யலாம்” என்று கூறினார். அவர்கள் இருவருமே மடத்தைவிட்டு புறப்பட்டு, அருகிலிருந்த ஒரு நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் அங்குமிங்குமாய்க் கடைகளுக்குச் சென்று, சில பொருட்களை வாங்கினார்கள்; போகிறபோது அறிமுகமானவர்கள் சிலருடன் உரையாடினார்கள்; இன்னும் மீதியிருந்த சில வேலைகளையெல்லாம் செய்துமுடித்தார்கள்; பின்னர் எல்லாவற்றையும் முடித்துவிட்டு மடத்திற்குத் திரும்பினார்கள். போதகர், தங்களது பயணத்தின் நோக்கத்தை மறந்துவிட்டார் என்று நினைத்த இளம் சீடர்: “ஐயா, நாம் எப்போது பிரசங்கம் செய்வது” என்று வினவினார். அதற்கு அந்த ஊழியக்காரன் புன்னகைத்தவாறு, “சகோதரனே, நாம் காலை முதற்கொண்டு பிரசங்கம்தான் பண்ணிக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய சக மனிதர்கள் மத்தியில் நமது செயல்களினாலும், நன்னடத்தையினாலும் நாம் மிகச்சிறந்த பிரசங்கத்தைச் செய்து வந்திருக்கின்றோம்” என்று கூறினார்.

நம்மோடு உறவாடும் மனிதர்கள் நாம் போதிப்பதைக் கேட்கையில், நடைமுறை வாழ்க்கையில் நாம் அவமரியாதையாய் நடந்துகொள்வதையும் மற்றும் பொறுப்பற்ற செயல்களைச் செய்வதையும் காணும்போது முகம் சுளிப்பார்களா அல்லது கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைத் தங்கள் மனதில் நினைத்துக்கொள்வார்களா? என்பதைக் கொஞ்சம் நிதானித்துப் பாருங்கள். “நீ விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.”

– Devotions
Bible Student’s Library