மனுக்குலமானது வான்வெளிக்கும் அப்பால், சாகசங்களை நிகழ்த்தக்கூடியதாகவும், அறிவு வளர்ச்சியின் அதிகரிப்பில் அநேக ஆசீர்வாதங்களை வழங்கக்கூடியதாக இருந்தாலும், இந்த அறிவின் அதிகரிப்பு என்னமோ, அதிக அதிருப்தியைத்தான் பரப்பியுள்ளது. இந்த அதிக அளவிலான அதிருப்தி ஒருநாள் சர்வதேசங்களின், ஏன் பாமர மக்களினங்களின் கலவரமாக வெடிக்கும் பொழுது என்னவாகும்?
நிலையினை சமாளிக்க தேசங்களின் சீருடையணிந்த வீரர்கள், மக்களின் கூக்குரலுக்கும் இணங்கி, அப்புரட்சியாளர்களுடன் அரசாங்கத்தினை எதிர்க்கும் கர்த்தரின் சேனையாக நின்றால் இப்பூமி தாங்குமா!
வேதத்தில் காணப்படும், யாக்கோபின் இக்கட்டுக்காலம், கோகு யார்?, மாகோகு யார்? தெய்வீகத் திட்டத்தில் “பழிவாங்கும் நாள்” – என்பது எவ்விதம் மனித சுயநலத்தினை சுட்டெரிக்கும் என்பதினையும், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், மத்தேயு, மாற்கு, லூக்கா இன்னும் பற்பல வேதாகம தீர்க்கதரிசனங்களை, நமது “முடிவுக்கால தீர்க்கதரிசனங்களை” விளக்கமாகப் புரிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு உதவுகின்றது.
“சிந்திப்போம்,நாம் அர்மகெதோன் போரின் விளிம்பில் நிற்கிறோம்!!”