இந்த புத்தகம், “இடைவிடாமல் ஜெபம்பண்ணுதல்” என்றால் என்னவென்றும், அதனால் உண்டாகும் “ஆசீர்வாதங்கள்” குறித்தும் விளக்குகிறது. அப்போஸ்தலர் பவுல் மற்றும் சங்கீதக்காரன் தாவீது ஆகியோரின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு, “ஜெபம்பண்ணுதலை ஒரு பழக்கமாகப் பெற்றிருப்பது” எப்படி என்பதை ஆராய்கிறது. ஒரு சிறுமியின் உதாரணத்தின் மூலம், அன்றாடப் பணிகளுக்கு மத்தியிலும் இடைவிடாமல் ஜெபிக்கும் முறையை எளிமையாக எடுத்துரைக்கிறது. “தேவனோடு ஐக்கியப்படும் சிலாக்கியம்”, ஜெபத்தில் “விசுவாசத்தோடு எதிர்பார்த்திருத்தல் / காத்திருத்தல்”, மற்றும் “தேவனிடத்திலும், நம்முடைய மீட்பராம் கிறிஸ்துவினிடத்திலும் கண்டடையப்படுகின்ற பலன்களாகிய இளைப்பாறுதல், சந்தோஷம் மற்றும் சமாதானம்” குறித்தும் பேசுகிறது. அனைத்துக் காரியங்களும் “ஜெபத்தில் தேவனிடம் கொண்டுவரப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்துகிறது.