இப்புத்தகமானது அநேக வேதாகம அகராதிகளின் விளக்கங்கள் மற்றும் சகோ. ரசல் அவர்கள் எழுதிய பிரதிகளில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பாடங்கள் எட்டு வயது மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களுக்கு பகிரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் அப்போஸ்தலர்களுடைய வாழ்க்கை சரித்திரத்தையும் மற்றும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு குணலட்சணப் பாடங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.
நம்முடைய குழந்தைள், சத்தியம் மற்றும் நீதியின் விதைகளை விதைப்பதற்கு ஏற்ற வளமான நிலமாக மாறவும், வரப்போகும் காலங்களுக்காக பலப்படுத்தப்படவும் இந்த புத்தகத்தின் பாடங்கள் அமையும் என்ற நம்பிக்கையுடன் பரிந்துரைக்கின்றோம்,