ஏனோக்கு எனும் முற்பிதா குறித்து வேத வாக்கியங்கள் சொற்பளவில் மாத்திரமே இருந்தாலும், அனைத்தும் மாபெரும் சத்தியங்களைப் பறைசாற்றுகின்றதாய் இருக்கின்றன. மரணத்தைக் காணாதப்படிக்கு தேவனோடு சஞ்சரித்து வந்தபோது எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கு குறித்த இந்த ஆராய்ச்சிப் பாடத்தில் தாழ்மையில் ஆராயப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் அவருடைய வாழ்க்கை குறித்த மர்மமானது, சரியான வேத வசனங்கள், ஏழாம் தூதனுடைய கருத்துக்களுடன் அவிழ்க்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன்பெறும்வகையில், புரிதலுக்கான புகைப்படங்களும் சேர்க்கப்பட்டு இப்புத்தகத்தை ஜெபத்துடன் தாழ்மையாகப் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே!